பயிலுநர்களை செயன்முறைப் பயிற்சிக்காக அரசாங்க தாபனங்களுக்கு இணைப்புச் செய்தல் தொடர்பில் அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவினை அதிகரிக்கும் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் வெளியிடப்பட்ட 2017.02.28 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2017 மற்றும் 2017.08.10 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2017(1) தொடர்பிலான சுற்றுநிருபங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
2017.02.28 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2017 இன் பிரிவு 7 இன் ஏற்பாடுகளின்படி பயிலுநர்களுக்கு நாளாந்தம் செலுத்தப்படும் கொடுப்பனவு 500 ரூபாவானது 2025.06.01 ஆம் தினத்திலிருந்து செயற்படும் வகையில் ரூ.1000/- ஆக திருத்தப்பட்டுள்ளதுடன், அவ் சுற்றறிக்கை மற்றும் 2017.08.10 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2017(1) உட்பட ஏனைய ஏற்பாடுகள் மாறாது காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.