Teaching

Thursday, June 5, 2025

அரச நிறுவனங்களில் இணைக்கப்படும் பயிலுனர்களுக்கு

பயிலுநர்களை செயன்முறைப் பயிற்சிக்காக அரசாங்க தாபனங்களுக்கு இணைப்புச் செய்தல் தொடர்பில் அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவினை அதிகரிக்கும் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் வெளியிடப்பட்ட 2017.02.28 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2017 மற்றும் 2017.08.10 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2017(1) தொடர்பிலான சுற்றுநிருபங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.



2017.02.28 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2017 இன் பிரிவு 7 இன் ஏற்பாடுகளின்படி பயிலுநர்களுக்கு நாளாந்தம் செலுத்தப்படும் கொடுப்பனவு 500 ரூபாவானது 2025.06.01 ஆம் தினத்திலிருந்து செயற்படும் வகையில் ரூ.1000/- ஆக திருத்தப்பட்டுள்ளதுடன், அவ் சுற்றறிக்கை மற்றும் 2017.08.10 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2017(1) உட்பட ஏனைய ஏற்பாடுகள் மாறாது காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.